Friday, August 3, 2012

கிறிஸ்தவ பெண்களை பர்தா அணியச் சொல்லும் பாதிரியார்!‎




பெண்களுக்கான பாலியல் வன்முறைகள் அதிகரிக்க அவர்கள் அணியும் ‎ஆடைகள்தான் காரணம் என்பதை தற்போது அனைத்து தரப்பினரும் ‎உணர்ந்து வரும் இவ்வேளையில், கிறித்தவப் பெண்களும் பர்தா அணிய ‎வேண்டும் என்ற கருத்து அவர்களது பாதிரியார்களின் மத்தியில் ‎உருவாகியுள்ளது.‎
கிறிஸ்தவ பெண்களும் முஸ்லிம் பெண்கள் அணிவது போன்ற அடக்க ‎ஒடுக்க மிக்கதும், எளிமையானதுமான ஆடைகளை அணிய வேண்டும் என ‎எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்களின் பிஷப் பிஷாய் கூறியுள்ளார்.‎
காப்டிக் கிறிஸ்தவ சபையின் உயர் பதவிக்கு முன்மொழியப்பட்ட பிஷப் ‎பிஷாய் இவ்வாறு பரிந்துரைத்துள்ளார் என பிரிட்டனில் பிரபல ‎பத்திரிகையான கார்டியன் கூறுகிறது.‎
பரிசுத்தமானவரான கன்னிமேரி (மர்யம்) முடியை முழுமையாக ‎மறைப்பதற்காக முழுமையான ஆடையை அணிந்திருந்தார். பின்னர் ஏன் ‎நீங்கள் இவ்வாறு அணிவதில்லை என்று கிறிஸ்தவ பெண்களிடம் பிஷப் ‎பிஷாய் கேள்வி எழுப்பியுள்ளார்.‎
எகிப்தில் பெரும்பாலான பெண்கள் தலையை மறைப்பதுடன் உடலை ‎முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிகின்றனர். குறைந்த அளவிலான ‎ஆடைகளை அணியும் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் ‎அண்மையில் அதிகரித்துள்ளதாக கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது.‎
ஆனால் இந்தப் பாதிரியார் இந்த அறிவிப்பை வெளியிட்டது தான் தாமதம் ‎உடனே கிறித்தவப் பெண்கள் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‎கன்னிமேரி முக்காடு போட்டது போல இவர்களே போட்டோ போட்டு ‎வைப்பார்கள். அதை கிறித்தவ பெண்கள் செய்ய வேண்டும் என்று ‎சொன்னால் மட்டும் அதைச் சொன்ன பாதிரியாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ‎நடத்துகிறார்கள் என்றால் இவர்கள் என்னதான் சொல்ல வருகின்றார்கள் ‎என்பது நமக்குப் புரியவில்லை. கர்த்தருக்கே வெளிச்சம்!‎ 

source : onlinepj.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன